Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_010. Show all posts
Showing posts with label Athikaaram_010. Show all posts

இனிய உளவாக இன்னாத கூறல்

குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக 
இனிமை - இனிப்பு, தித்திப்பு இன்பம்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

உளவாகஉளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்

இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்

கூறல் -  கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்

கனி - பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம்.

இருப்பு - இருக்கை; மலவாய்; இருப்பிடம் குடியிருப்பு நிலை கையிருப்பு பொருண்முதல்.

இருப்ப - இருத்தல் 

காய் - முதிர்ந்துபழுக்காதமரஞ்செடிகளின்பலன்; மூவகைச்சீரின்இறுதியிலுள்ளநேரசை, காய்ச்சீர்; பழுக்காதபுண்கட்டி; முதிராதுவிழுங்கரு; பயனின்மை; வஞ்சனைவிதை; சொக்கட்டான்காய்; பக்குவப்படாதவிளைபொருள்கள்.

கவர்ந்து - கவர்தல் - அகப்படுத்துதல்; கொள்ளையிடல்; திருடல்; வசப்படுத்துதல்; விரும்புதல்; பெற்றுக்கொள்ளுதல்; நுகர்தல்; முயங்கல்; கடைதல்; அழைத்தல்; பிரிதல்; மாறுபடுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

முழுப்பொருள்
இனிமையை நன்மையை பயக்கும்(உண்டாக்கும்) இனிய சொற்களை கூறாமல் துன்பம் பயக்கும் வன்சொல்லை பயன்படுத்துவது எப்படிப்பட்டது தெரியுமா? முதிர்ந்த கனிந்த பழத்தை விரும்பாமல் முதிராத காயை தேர்ந்தெடுப்பது போல் ஆகும். 

குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்கள் மாம்பழத்தை விட மாங்காயை தான் விரும்புவார்கள். அதனால் தான் திருவள்ளுவர் சுவை என்னும் பொருளில் கனியையும் காயையும் கூறவில்லை என்பதை நாம் உணரவேண்டும். முதிர்ந்த பழத்தில் இருந்து வரும் விதை மேலும் பல செடிகளை மரங்களை வளர்க்க பயன்படும். அதாவது முதிர்ந்த பழம் நல்வினை பயக்கும். இனியசொற்களும் அப்படி தான் நல்வினை பயக்கும். மேலும் மேலும் இனியசொற்களை பேசவும் கேட்கவும் தூண்டும். அதுவே முதிராத காய் விதைகளை கொண்டிருக்காது (அல்லது முதிராத விதைகளை கொண்டிருக்கும்). அதனால் ஒரு பயனும் இல்லை. வன்சொற்கள் பயன் தராது. மேலும் மேலும் கேட்க தூண்டாது. 

"குறள் 202 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்" என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். (அதாவது நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.) ஆதலால் தீமையை தீய சொற்களை பேசாதே. இனிய சொற்களை மட்டும் பேசு. 

மேலும்: ஷோக் உரை

ஒப்புமை
”கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே” (அப்பர்.ஆருர் 1)

பரிமேலழகர் உரை
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

மு.வரதராசனார் உரை
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Thirukkural - Management - Communication - Pleasant speech
This part contains eight Kurals that bring out the importance of pleasant conversations. Valluvar uses a simile to emphasize the importance of using pleasing words during interactions with others. Preferring to use unpleasant, limiting, and impolite words when there are pleasing, empowering,  and polite words is similar to being attracted to unripe fruits when ripe and luscious fruits are available, points out Kural 100.

To use harsh words when sweet ones are at hand
Is to prefer raw fruit to ripe.

Prefer to eat fruits that are ripe as they are beneficial in all respects. Always speak politely, pleasantly, and pleasingly so that people can benefit from your speech. Check how often you resort to unpleasant words.

English Meaning - As I taught a kid - Rajesh
When there are kind words that give happiness to heart and that brings progress and positive change, yet when one uses harsh words then it is like choosing raw unripe fruit over ripe and luscious fruit that are available.

Questions that I ask to the kid
Who will avoid uttering harsh words? Why?
You have seen the benefits of kind words. What will you utter and not utter in future? Why?
What is it is like uttering harsh words when you have pleasant words to say?

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இன்சொல் - இனிமையான சொல்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

ஈன்றல் - ஈனல்; உண்டாதல்

காண்பான் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

எவன்கொலோ - எதனைக் கருதி?

வன்சொல் - கடுஞ்சொல்; மிலேச்சமொழி.

வழங்குவது - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல். 

முழுப்பொருள்
இக்குறளில் நம்முடைய அனுபவத்தின் மூலமே நமக்கு பாடம் கற்பிக்கிறார் திருவள்ளுவர். 

பிறர் தன்னிடம் வந்து இனிமையான சொற்களை பேசினால் நன்றாக உணருகிறான். அவன் அவனுடைய சமநிலையை இழக்கமாட்டான். அதுவே இன்சொல்லின் சிறப்பு.  அதுவே பிறர் நம்மிடம் கடுமையான சொற்களை பேசினால் நமக்கு சினம் வருகிறது. சமநிலை இழக்கிறோம். ஆதலால் வன்சொல்லின் கேட்டையும் இன்சொல்லின் சிறப்பையும் உணர்ந்தவன் ஏன் பிறரிடம் பயனபயக்காதா வன்சொல்லை பயன்படுத்துகிறான் ? என்று திருவள்ளுவர் கேட்கிறார். இன்சொல்லின் இனிமையை அறிந்த நீ வன்சொல்லை பயன்படுத்தாத என்று சொல்லாமல் சொல்கிறார்.

கபிலரின் இன்னா நாற்பது “அறமனத்தார் கூறுங் கடுமொழியின்னா” என்கிறது.  அறமனத்தோர் கூறுகின்ற கடுமையான மொழியானது துன்பத்தைத்தரும் என்கிறார் கபிலர்.   அறமொழியினராக இருப்பின், வன்மொழி பேசுதல் இராது. அப்படிஅவர்களே வருந்தி பேசும்போது, அது பிறர்க்கும் ஊறு விளவித்து, அவர்களுக்கே கூட மனவருத்தம் என்கிற துன்பத்தைத் தந்துவிடும். சங்க நீதிநெறி நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை “நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை” என்றும் “கல்லா ஒருவர்க்கு தம்வாயிற் சொற்கூற்றம்”, “வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை” என்கிறது.

வன்மொழி பேசுபவர்கள் நல்ல நட்புகளை இழப்பர். கல்லாத ஒருவருக்குத் தான் அவர் வாய்ச்சொல் மரணதேவனாக முடியும் என்பதால், வன்மொழியாளர்கள் கல்லாதவர்க்கே ஒப்பாவர் என்றும் உணர்த்தப்படுகிறது.  தவிர, ஒருவரை வன்மொழி பேசுவதால், அதுவே நமக்கும் வந்து சேரும். ஆனால் இன்மொழியால் வணங்குபவர்க்கு, எல்லோருமே சுற்றமாகி விடுவர். மேலும், இன்சொல், வன்சொல் இவற்றின் பயன்களையும் கீழ்கண்டவாறு சுருங்கச் சொல்கிறது.

“இன்சொலான் ஆகும் கிழமை, இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் – மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்”   

”புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின் றுண்ர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ” (பழமொதி 277)

மேலும்: ஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

சாலமன் பாப்பையா உரை
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
Everyone would have experienced the benefit of pleasant speech. Everyone knows the merits of sweet and pleasant words. Everyone expects others to use pleasant words when others speak to them. Despite that, everyone uses harsh and unpleasant  words when they speak to others. Kural99 questions this practice because this practice is illogical.

How can one pleased with sweet words oneself
Use harsh words to others?

That sort of practice would have been a surprise to Valluvar. Hence, he questions, “Why should we 
resort to painful words?”

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
சிறுமையுள்சிறுமை - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நீங்கிய - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

இன்சொல் - இனிமையான சொல் 

மறுமையும் - மறுபிறவி; மறுவுலகம்.

இம்மையும் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
இழிவான பிறருக்கு துன்பம் தரக்கூடிய சொற்கள் சிறுமை வாய்ந்த சொற்கள். அத்தகைய சிறுமையான சொற்களை நேரடியாகவோ அல்லது சொற்களின் உள் அல்லது சொற்களை கூறும் முறையில் பொதிந்தோ வைக்காமல் சொற்களில் கூட சிறுமையை நீக்கி இனிய சொற்களை ஒருவர் பேசினால்  அது அவருக்கு மறுபிறவியிலும் இப்பிறவியிலும் இன்பத்தை தரும். 

துன்பத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். இப்பிறவியில் துன்பத்தை அனுபவிப்பவர் மறுபிறவியிலாவது இன்பமான வாழ்க்கை அமையட்டும் என்று விரும்புவது இயல்பு. இப்பிறவியில் இன்பத்தை அனுபவிப்பவர் மறுபிறவியில் துன்பத்தை அனுபவிக்க தயாராக இருக்க மாட்டார் இன்பமே வேண்டும் என்பார். அதுவும் இயல்பு. ஆதலால் இன்பமே எல்லோருக்கும் வேண்டும். மேலும்  மறுபிறவியில் முழுபிறவிக்கான காலம் இருக்கிறது. இப்பிறவியில்  ஒரு குறிப்பிட்ட அளவு காலம் முடிந்துவிட்டது. இன்னும் சொச்சம்(மிச்சம்) காலம் தான் இருக்கிறது. இப்பிறவியில் நமது சுற்றம் சூழல் ஆகியவற்றை மாற்றுவது கடினம். இப்பிறவியில் பயனாக மறுபிறவி அமையும் என்றால் இப்பிறவியில் ஒழுங்காக இருக்க மக்கள் நினைப்பர்.  அதனால் தான் மறுமையை வரிசையில் முன்னே வைத்தார் திருவள்ளுவர் என்று நினைக்கிறேன். 

இம்மையில் அதாவது இப்பிறவியில் எப்படி இன்பம் ? இனியசொற்களை பேசினால் நம்மிடம் உறவாட மக்கள் தயங்கமாட்டார்கள் மாறாக விரும்புவார்கள். உறவுகளே செல்வம். நல்ல உறவுகள் இன்பம் பயக்கும். மேலும் கடுஞ்சொற்களை பேசினால் ஏன் நாம் அப்படி பேசினோம் என்று நாமே பின்பு வருந்தக்கூடும் (தன் நெஞ்சே தன்னைச்சுடும்). ஆதலால் குற்ற உணர்ச்சியால் துன்பத்தை அனுபவிப்போம்.  இனிய சொற்களை மட்டும் பேசினால் கவலையில்லாமல் இருக்கலாம். துன்பம் இல்லாத நிலையே ஷக்தி. அதுவே இன்பம் பயக்கும்.


மேலும்: ஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை
புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

மு.வரதராசனார் உரை
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

ஈன்று - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

ஈன்று - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

பண்பின் - பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

தலைப் - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

பிரியாச் - பிரியாமல், நீங்காமல்; நினைக்காத;

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
நயன் 
நயன் என்ற சொல்லுக்கு நயம் என்று பொருள். நயம் என்ற சொல்லுக்கு பயன் என்ற பொருள் இருந்தால் பின்பு இதே குறளில் பயன் ஈன்று என்று கூறியமையால் இங்கு நயன் என்ற சொல்லுக்கு நீதி / அறம், மேன்மை, ஒற்றுமை/உறவு ஆகிய பொருள்கள் பொருந்தும்.

"நன்றி ஈது" என்று கொண்டால், நயத்தினை  நயந்து, வேறு" என்று கம்பராமாயணத்தின் கும்பகருணன் வதைப் படலத்திலும் என்று கூறப்பட்டுள்ளது. அது நயம் என்பது நீதி/அறம் என்று பொருள் கொள்கிறது. அதுபோல் மணிமேகலையிலும் "ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை" என்று கூறப்பட்டுள்ளதால் ஒற்றுமை / உறவு ஆகிய பொருளும் நயன் என்ற சொல்லுக்கு பொருந்தும்

குறளின் பொருள் 
இங்கே சொற்கள் பேச்சு என்ற அர்த்தத்தில் மட்டும் வராது. ஒரு கடிதம், ஒரு செய்தித்தாளின் கட்டுரை என்று சொற்களை பயன்படுத்தும் எல்லா தளத்திற்கும் பொருந்தும் என்பதை முன்னரே கூறிக்கொள்கிறேன்.

ஒரு செயலை செய்யும் பொழுது அல்லது ஒரு விவாதம் என்று வரும் பொழுது நாம் பலரை சந்திக்கிறோம். அப்போது உரையாடல் என்று வருகிறது. அப்பொழுது சொற்களின் தேர்ச்சி மிக அவசியம். சொற்களின் சிறப்பு சொற்களின் மேன்மையில் இருக்கிறது. ஆதலால் ஒருவர் உரையாடும் பொழுது சொற்களின் பண்பு அறிந்து அதன் அளவு அறிந்து அதன் சிறப்பு நீங்காமல் (அதாவது தீய சொற்களையும், தீங்கு விளைவிக்க கூடிய சொற்களையும் தவிர்த்து) பேசினால், அவருக்கு நீதியும்/அறமும், வினையின் பயனும், நன்மையும் கிடைக்கும். அவ்வாறு சொற்களை தேர்ந்தெடுத்து பேசுவதால் யாருக்கும் அநியாயமான இழப்பு இல்லையென்பதால் உறவுகளுக்கு சேதம் இல்லை. அவ்வாறு கையாள்வதால் ஒருவருக்கு மேன்மையும் கிட்டிற்று.

அப்படி பார்க்கையில் மகாத்மா காந்தி இனிய சொற்களுக்கு சொந்தக்காரர். அவர் ஆங்கிலேயருடன் மிகவும் கனிவாகவே பேசினார். அதன் விளைவாக பெருத்த உயிர் சேதம் இல்லாமல் இந்திய நாடு பயன் பெற்றது. சுதந்திரம் உரிமை என்பதை தாண்டி அது நீதி என்பதை காந்தி ஆங்கிலேயரின் மனசாட்சிக்கு மிகவும் பக்குவமாக உரைத்தார். காந்தி கோபப்படாமல் தீய சொற்களை பயன்படுத்தாமல் ஆவேசப்பேச்சுகளை தவிர்த்ததால் உண்மையை பேசியதால் அவருடன் எதிர்வாதம் செய்ய ஆங்கிலேயர்கள் தயங்கினர். அது மட்டும் இன்றி காந்தியின் பேச்சை எல்லோரும் செவிகொடுத்தும் உள்ளம் கொடுத்ததும் கேட்டனர்.

மேலும்: ஷோக் உரை

ஒப்புமை
குறள் 45

பரிமேலழகர் உரை
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.).

மணக்குடவர் உரை
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
அல்லவை - தீயவை; பயனின்மை.

தேய - தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல்.

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

இனிய - இன்பம் தருவது

சொலின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
அறத்தை (தருமம், புண்ணியம்) பெருக்கக்கூடிய நல்லனவற்றை (நல்ல சொற்கள், எண்ணங்கள், செயல்கள் என்று) மட்டும் பயக்கவற்றை பிறரிடம் நாடிச்சென்று இன்பம் பயக்கும்வண்ணம் இனிய நற்சொற்களை சொல்வார் என்றால் அவரிடம் உள்ள தீயவையும் பயனற்றவையும் பாவங்களையும் குறைந்துக்கொண்டே இருக்கும். அறத்தைப் பேருக்கும் இனியவற்றை நாடிச்சென்றுப் பேசினால் துன்பமெல்லாம் குறையும். அது நம்மை செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கும். அமைதி பிறக்கும் மனம்மகிழும். இதையே இன்று Positivity என்று எல்லோரும் கூறுகின்றனர்.

நல்லவற்றை சொன்னால் மட்டும் போதாது. அதனை இனிய சொற்களில் சொல்வதும் அவசியம் ஏனெனில் நல்லவையானாலும் கடும் சொற்களால் சொன்னால் அது அறமாகாது.

பாவம் தேய்ந்தால் அறம் நிற்கும். மறுமையில் பயனடைவாய்.

மேலும்: ஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்

Thirukkural - Management - Communication - Pleasant Speech
If  a person researches and searches for pleasing and empowering words and uses them in his conversations with others, all the negative feelings and painful memories will diminish and disappear. Because of this practice, he will have increased  virtues, promises Kural 96.

Sweet words well-Chosen diminish ill 
And increase virtue.

Choose your words wisely and intelligently, and express them with affection so that that choice will make others happy and make you prosperous as well. Therefore, the benefits are twofold.

பணிவுடையன் இன்சொலன் ஆதல்

குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம்.
பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல்.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

உடையன் -பொருளின் சொந்தக்காரர்

இன்சொலன் - இனிமையான சொற்களை பேசுபவன்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஒருவற்கு - ஒருவர் - ஓராள்; ஒருவன்; அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை.

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

அல்ல - இல்லை

மற்றுப் - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
பணிவு என்றால் - தாழ்ந்து அமைதியாக இருப்பது மட்டும் அல்ல. பணிவு என்றால் எளிமையாக இருத்தல் என்பதும் ஆகும். எளிமை என்பது உடையில் மட்டும் அல்ல நமது நடத்தை, பாவனை, சொற்கள், வசிப்பிடம், நமது சேர்க்கை, நமது கேளிக்கைகள், நமது பழக்க வழக்கங்கள், என்று எல்லாவற்றிலும் எளிமை வேண்டும். அதாவது பணிவு வேண்டும்.

அப்படி ஒருவர் பணிவுடன் இருந்து கடுஞ்சொற்களை பயன்படுத்தாது  இனிய சொற்களை பிறரிடம் கூறுவார் என்றால் அதனை விட ஆபரணம் ஒருவருக்கு வேறு என்ன இருக்க போகிறது ?

இதை ஏன் ஆபரணம் என்று சொல்லவேண்டும் ? நமது உள்ளதினால் வரும் இனியசொற்கள் நமக்கு ஒருவிதத்தில் செல்வமே. ஏனெனில் கடுஞ்சொற்கள் நம்மில் வெறுப்பை வளர்க்கும், பகையை வளர்க்கும், உள்ளத்தின் அமைதியை அழிக்கும். ஆதலால் கடுஞ்சொற்களினால் நமது உடலில் சமநிலை குலைந்து மன அழுத்தத்தினால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற கேடுகள் உடலில் உண்டாகும். ஆதலால் இனியசொற்கள் நமக்கு கவசம்/ ஆபரணம்.

அது மட்டுமின்றி நாம் இனிய சொற்களை பேசினால் நம்மிடம் எல்லோரும் நட்புப்பாராட்டி மகிழ்வர். உறவுகளை போல் வாழ்வில் ஈன்ற அணிகலன் வேறு எது  ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
There is no greater gift or jewel or valuable ornament to a person than being polite, affable, and using pleasant words in his conversations, as found in Kural 95.

Sweet words and humility are one's true jewels;
All else are foreign and none.

In other words, a person may possess all the worldly possessions, material, wealth, jewels but may not use pleasant words. That sort of person, though he has everything, does not have anything. Whereas, a person with humility and humbleness may not have any material possessions but has everything he needs in life because of his pleasant speech.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
உறு - uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதி செய்யும் பொருள் (தொல். சொல் 301).  

துன்புறூஉம் -  துன்பத்தை மிகுவிக்கும்; துன்பத்தை அதிகரிக்கும்

துவ்வாமை - tuvvāmai   n. id. + id. +. 1.Non-eating, non-enjoyment; நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 2. Poverty, indigence; வறுமை துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும்(குறள், 94). 3. Absence of desire; வேண்டாமை (அக. நி ) 4. Disgust, dislike; வெறுப்பு (W.)  

இல்லாகும் - இல்லாமல் போகும்; இல்லாதொழியும்

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

இன்பம் - iṉpam   n. இனி-மை. [M. inbam.]1. Delight, joy, happiness; அகமகிழ்ச்சி (திவா.)2. Sweetness, pleasantness; இனிமை (மதுரைக். 16.) 3. Sensual enjoyment, sexual love;காமம். அறம் பொருளின்பம் (குறள், 501). 4. Marriage; கலியாணம் கொம்பனையாளையும் . . . குன்றனையானையும் . . . இன்பமின்யற்றினார் (சீவக. 1980). 5.Sweetness of subject matter and of style anddiction, a merit of poetic composition; சொல்லினும் பொருளினுஞ் சுவைபடுவதாகிய குணம் (தண்டி.18.)  

இன்புறூஉம் -இன்பம் மிகும்; இன்பம் அதிகரிக்கும்

இன்சொல் - இனிமையான சொல் - இனிமைபயக்கும்சொல், iṉ-col   n. id. +. Pleasantspeech, kind word, courteous language, compliment, opp. to வன்சொல் பிரியவசனம் இன்சொ லினிதீன்றல் (குறள், 99).  

இன்சொலவர்க்கு -  இன்சொல் சொல்பவர்க்கு

முழுப்பொருள்
(வலியார், ஒப்பார், எளியார் உட்பட) எல்லோரிடத்திலும் இனிமையான சொற்களை, பிறருக்கு இனிமை பயக்கும் சொற்களை, அகமகிழ்ச்சி/மனமகிழ்ச்சித் தரக்கூடிய சொற்களை பேசுபவர்க்கு வாழ்வில் இன்பமே மிகும். அத்தகையவர்களுக்கு துன்பம் தரக்கூடிய துன்பத்தை அதிகரிக்கக்கூடிய துவ்வாமை எனப்படும் வறுமை, வெறுப்பு, பொறாமை ஆகியவை இல்லாமல் போகும் அழிந்துப்போகும். அதுவே மிக பெரிய வரமாகும்.

யோசித்துப்பார்த்தால் நாம் பிறரிடம் அன்புடன் பேசினால் பிறரும் நம்முடன் அன்புடன் பேசுவார்கள். அதுப்போல பிறரிடம் நேசத்துடன் அணுகினால் அவரும் நம்மை நேசத்துடன் அணுகுவார். எல்லாம் சுபிக்‌ஷமாய் இருக்கும். நாம் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருந்தால் நம்மை சுற்றி எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருப்பர். அதுவே நம்மை சுற்றி துன்பம் குறைவதற்கும் இன்பம் பெறுகுவதற்கும் ஊற்றாக மாறும்.

நமக்கு வறுமை வந்தாலும் நம்மை சுற்றி உள்ள இன்சொல்லால் ஈட்டிய நண்பர்கள் நம்மை காப்பார்கள். நமக்கு செல்வம் கொடுத்தோ, அல்லது நமக்கு வருவாய் தரக்கூடிய வேலைகள் தந்தோ, நமக்கு வேலை வாங்கித் தரக்கூடியவர்களிடம் அறிமுகம் கொடுத்தோ, அல்லது ஆறுதல் கூறியோ நமக்கு உதவுவர். 

நாம் இன்சொல் பேசினால், நம் அன்பு பிறருக்கு புரியும். நம்மிடம் பொறாமை கொள்ளமாட்டார்கள். [குறிப்பாக நாம் வளர்ச்சி அடையும் போது எல்லாம் பிறரை உதாசீனம் செய்யாது அவரை நேசித்து பணிவுடன் நடந்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் பிறர் நம்மீது பொறாமை மற்றும் வெறுப்பு கொள்வர்]. பொறாமை இல்லை என்றால் அங்கே கசப்பு இல்லை. பொறாமை இல்லை என்றால் அங்கு வஞ்சகம் பிறக்காது. ஆதலால் அங்கு தீமையும், துன்பமும் பிறக்காது.

நாம் வெறுப்பாக பேசினால் எதிரியும் வெறுப்பாக பேசுவார், வெறுப்பும் வளரும். அதுவே நாம் இன்சொல் பேசினால், நம்மீது வெறுப்பு வளராது. இருவருக்கு இடையே பரஸ்பரம் வளரும். ஆதலால் துன்பம் குறைந்து இன்பம் வளரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
A person who always uses pleasing and empowering words when he speaks to and with others, will 
never have or experience painful poverty, assures Kural 94.

Want and sorrow shall never be theirs 
Who have a pleasant word for all.

Always uttering or using pleasing words with everyone will drive poverty away from the speaker and 
bring prosperity  to him. This can happen as a person's thoughts, words, and deeds are 
interconnected.

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முகத்தான் - முகத்து + ஆன்
முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம்
ஆன் - அவ்விடம், இக்கணம்

அமர்ந்து - அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

இனிது - இனி-மை, இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அகத்தான் - அகம் + ஆன்
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு, உள் மனம், அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

இன் - இனிமை

சொலினதே - சொல் + இனிதே

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல், சுகம்

முழுப்பொருள்
ஒருவரை வாசலில் (வாயிலில்) கண்ட உடன் (அல்லது முதல் முதலில் கண்ட உடன்), அவர் மீது, அன்புக்கொண்டு (விருப்பத்துடன்), இன்பம் தரும் மலர்ச்சியோடு அவரை காண வேண்டும். அதுப்போல உள் மனதில் இருந்து மகிழ்ந்து அவரிடம் இனிமையான நற்சொற்களை கூற வேண்டும். அதாவது அடுத்தவர் முகம் சுளிக்காத சோற்வூட்டாத சொற்கள். அதுவே அறம் என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே திருவள்ளுவர் ஒருவருக்கு பணம் காசு நகை கொடுக்க சொல்லவில்லை. இங்கே சொல்வது எல்லாம் பணம் கொடுத்து வாங்க தேவையில்லாத இனிய சொற்களை மட்டும் தான். ஆனால் அதற்கு தேவை மனது மட்டுமே.

இங்கே ஏன் திருவள்ளுவர் வாயிலில் (முதன் முதலில்) கண்ட உடன் இன்முகத்துடன் நோக்க வேண்டும் என்கிறார் ? எனக்கு என்ன தோன்றுவது என்றால் - ஒருவரை வரவேற்கும்/சந்திக்கும் பொழுது விருப்பம் இல்லாத மகிழ்ச்சியில்லாத முகத்தோடு இருந்தால், நாம் சந்திக்கும் நபருக்கு நம்மிடம் பேச ஒரு மனத்தடை உருவாகும். நாம் பல தடவை வீட்டில் பார்த்திருப்போம் - யாராவது ஒருவர் வீட்டில் முகம் கொடுத்து பேசவில்லை என்றால் ஏதோ தவறு இருக்கிறது என்று. இவ்வீட்டில் நாம் இங்கு வருவது இவருக்கு (ஒருவருக்கு) பிடிக்கவில்லை என்று நமக்கு புலப்படும். அதன் பிறகு நாம் அங்கு செல்வதை பொதுவாக தவிர்ப்போம். அதனை தவிற்கவே சந்திக்கும் பொழுதே இன்முகத்துடன் சந்திக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”விருந்துகண் டுள்ளம்
களிக்கு மங்கையர் முகமெனப் பொலிந்தன கமலம்’ (கம்ப.கார் 37)

பரிமேலழகர் உரை
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது.

ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

மணக்குடவர் உரை
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பொருள்: முகம் மலர்ந்து இனிது நோக்கி அகம் ஆம் இன் சொல்லினது அறம்‡ முகம் மகிழ்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தின் கண் (உவகையால்) உண்டாகும் இனிய சொல்லையுடைய செயல் அறம்.

அகலம்: அத்து இரண்டும் ஆனும் சாரியைகள். ‘ஆல்’ அசை. ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் அறத்திற்கு முதலாகிய செயலைச் சுட்டி நின்றது. ‘ஏகாரம்’ அசை. இன் சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘முகத்தா னமர்ந்து’. மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘இன்சொலினதே’. தாமத்தர் பாடம் ‘இன்சொலஃதே’. தருமர், நச்சர் பாடம் ‘இன்சொலி னஃதே’.

கருத்து: மலர்ந்த முகத்தோடும் இனிய சொல்லோடும் உவந்த உளத்தோடும் செய்யப்படும் வினைகள் அறமாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever we meet or come across someone we should greet them with smile in our faces. Also, it is our duty to say heartfelt positive and kind words. i.e., we should not hurt others. Our face reflects our heart. Hence, smile in our face is mentioned first. Similarly our words reflects our heart. 

Questions that I ask to the kid
When we speak to others how should our words be?
How should we treat others when we meet them? How would you relate it to words?

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே

குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
அகன் அமர்ந்து - உள்ளம் குளிர்ந்து; உள்ளத்தின் உவப்புடன்
ஈதலின் - தானம் செய்தல்
நன்றே -  அதனை விட நன்று
முகன் அமர்ந்து - முக மலர்ச்சியுடன் ஒருவர் முன்
இன்சொலன் -  இனிய மனதிற்கு இதமான சொல்லை
ஆகப்பெறின் -  கூறுபவராக இருந்தால்

முழுப்பொருள்
உலகலில் தானம் செய்வது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, எவ்வளவு நன்மை பயக்க கூடியது என்று எல்லோரும் அறிவோம். அதுவும் மனமுவந்து தானம் செய்வது சிறப்பானது. அதனினும் சிறப்பு என்று ஒன்று உண்டோ? இருக்கிறது. மற்றவர்களிடம் பேசும் பொழுது முக மலர்ச்சியுடன் கனிவாக பேசுவது. 

ஏன் இதை திருவள்ளுவர் சொல்லுகிறார் என்று எண்ணினேன். நாம் அன்றாடம் பல இன்னல்களை சந்திக்கிறோம் இவ்வுலகில். நமது கோவங்களையும் விரத்திகளையும் மற்றவரிடம் காட்டினால் இவ்வுலகம் நரகம் ஆகிவிடும். நமக்கு அது தீமையே விளைவிக்கும். நம்மை விட்டு மக்கள் விலகுவர். அது நமக்கு நல்லது அல்ல. எவ்வளவு தானம் (கோயிலில் அன்னதானம் செய்வதில் தொடங்கி)  செய்தாலும் நாம் இனிய மனிதராக இல்லை என்றால் என்ன பயன்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
குறள் 84 

பரிமேலழகர் உரை
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)

மணக்குடவர் உரை
மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின். அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்,

ஞா. தேவநேயப் பாவாணர்  உரை
முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார்.

மு.வ உரை
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்

சாலமன் பாப்பையா உரை
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது

பொருள்: முகம் மலர்ந்து இன் சொல்லன் ஆக பெறின் - முகம் மலர்ந்து இனிய சொல்லை யுடையன் ஆகப் பெற்றால், அகம் மலர்ந்து ஈதலின் நன்று - (அஃது) உள்ளம் உவந்து ஈதலைப் போல (ஓர்) அறமாம்.

அகலம்: சொல்லன் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அகனமர்ந்து’, ‘முகன மர்ந்து’. அப் பாடங்களைக் கொள்ளாததற் குரிய காரணங்களை ‘அகமலர்ந்து செய்யாள்’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்திற் காண்க. ‘ஏகாரம்’ அசை.

கருத்து: இன்சொல் கூறல் ஈகையைப் போல ஓர் அறமாம்.

இன்சொலால் ஈரம் அளை

குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் 
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இன்சொல் - இனிமையான சொல்; இனிமை பயக்கும் சொல்
இன்சொலால் - இன்சொல் + ஆல் - இனிமையான சொல் என்னவென்றால்
ஆல் - அசைநிலை

ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி; īram   s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. freshness, greenness, பசுமை.

அளை - தயிர்; மோர் வெண்ணெய் புற்று பொந்து குகை ஏழாம்வேற்றுமையுருபு.
அளை - (வி)துழாவு; கல தழுவு

(அளை + கிறேன், ந்தேன், வேன்) - கலந்து

இப்படிறு - படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை.

இலவாம் - இல்லாமல்
இப்படிறு இலவாம் - பொய்மை / வஞ்சனை இல்லமால்; வாய்மையுடன்

செம்பொருள் -  உண்மைப்பொருள்; நேர்பொருள்; சிறந்தபொருள்; முதற்பொருளானகடவுள்; அறம்.
(மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது.)

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - கண்டவர்
செம்பொருள் கண்டார்  - அறத்தினை உணர்ந்தவர்

வாய்ச்சொல் - வாயினின்றுவருஞ்சொல்; வெறுஞ்சொல்; துணைச்சொல்.

முழுப்பொருள்
இன்சொல் என்பது என்னவென்றால் நெஞ்சுடன் அன்பு கலந்த அன்பு வெளிபடுகின்ற வாய்மையுடன் கூடிய வஞ்சனை கலக்காத சொல்லே இனிமையான சொல். இந்த மெய்பொருளை அறிந்த அறம் அறிந்தவர்களின் வாய்ச்சொற்களாக இன்சொல் இருக்கும்.

1) இந்த இன்சொல் எல்லோரிடமும் கொடுக்கபட வேண்டும்.

2) வஞ்சனைகள் இல்லார் அறத்தினை உணர்ந்தாலும், ஒருவருக்கு அன்பு நிறைந்த உள்ளமில்லையானால், அவருடைய வாய்மொழியானது இன்மொழியாயிராது. அதனால் தான் அளை என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

யோசித்துப் பார்ப்போம், நமது பேச்சில்  எவ்வளவு அன்பு இருக்கிறது என்று. கோபம் இருக்கும், வெறுப்பு இருக்கும், சந்தேகம் இருக்கும், அதிகாரம் இருக்கும், கிண்டல், நக்கல், நையாண்டி  எல்லாம் இருக்கும்.  அன்பு இருக்குமா ?  அன்பு இல்லாத பேச்சு இன் சொல் அல்ல. 

அறத்தினை உணர்ந்து பேச வேண்டும். அறம் என்றால் என்ன என்றே தெரியாவிட்டால்  எப்படி பேசுவது? பேசாமல் இருப்பது நலம். அறம் அல்லாதவற்றை  பேசுவது இனிய சொல் அல்ல. நல்லவற்றை, பயனுள்ளவற்றை மட்டும்தான் பேச வேண்டும். 

3) அதேபோல, அன்பு நிறைந்தவராயிருந்தாலும், சுயநலங்காரணமாக, வஞ்சனைக் கலந்த செயற்பாடு உடையவரானாலும், இனிய சொற்கள் வெறும் மேல் பூச்சாக்க இருக்குமே தவிர உள்ளார்ந்ததாக இராது. அதனால் தான் இப்படிறுஇலவாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

பொய் கலவாமல் பேச வேண்டும்.  பேசுகிறோமா?  உண்மை பேச முடியாவிட்டால், பேசாமல் இருந்து விட வேண்டும்.  எவ்வளவுதான் அன்பாக பேசினாலும், அதில் பொய் இருந்தால், அது இனிய சொல் அல்ல.  சிலர் மற்றவர்களை வானளாவ புகழ்வார்கள். மனதுக்குள் வைத்துக் கொண்டே. அவர்களின் புகழ்ச்சியில் உண்மை இல்லை. யோசித்துப்பார்த்தால் எத்தனையோப் பேர் மனதில் உண்மையான அன்பில்லாமல் நம்மிடம் அன்பாய் இருப்பது போன்று பாசாங்கு செய்வர். அது தவறு. 

4) இதன் காரணம் பற்றியே இரண்டையும் இணைத்தே கூறியது.

இவ்வதிகாரத்தின் முதற்குறளிலேயே இன்சொல் என்பதன் விளக்கத்தை வள்ளுவர் கூறுவது கவனிக்கத்தக்கது,

மேலும்: அஷோக்

சில கவிதைகள்

ஒருவர்க்கொருவர் நாம்
பரிமாறும் மென் சொற்கள்
பத்திரம் கொள்கின்றன
வானகத்தின் காப்பறையில்.
ஒரு நாள் அவை மழையென
வீழும் வையகத்தில்.
விரியுலகெங்கும் 
துளிர்க்கும் பசுமையாய்.
%
ரூமி

ஒப்புமை
”அன்புடை நன்மொழி அளைஇ” (முருகு 292)
“அன்புடை நன்மொழி இரவலர்க் கீந்த” (சிறுபாண்: 93)
“அன்புடன் அளைஇய அருள்மொழி” (மணி 5:63)



பரிமேலழகர் உரை
[அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.)

இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

மு.வரதராசனார் உரை
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இன்சொல் ஈரம் அளை படிறு இல ஆம் - இனிய சொற்கள் அன்போடு கலந்து குற்றம் இல்லாதன வாம்; செம்பொருள் கண்டார் வாய் சொல் - (அன்றியும்) மெய்ப்பொருள் உணர்ந்தார் வாயினின்று வரும் சொற்களாம்.

அகலம்: இன் சொல் என்பது ‘இலவாம்’, ‘வாய்ச் சொல்’ என்னும் இரண்டு பயனிலைகளைக் கொண்டு நின்றது. தருமர் பாடம் ‘இன்சொலா யீரம்’ ; ‘காண்பார் வாய்ச் சொல்’. மற்றை நால்வர் பாடம் ‘இன் சொலா லீரம்’. இகர அளபெடை இசை நிறைக்க வந்தது. ஆல் என்பது அசை. ‘மாசற்ற நெஞ்சுடையார் வன்சொ லினிது’- நன்னெறி.

கருத்து: அன்போடு கலந்து குற்றமற்றதும், மெய்ப் பொருளுணர்ந்தார் வாயினின்று வருவதும் இனிய சொல்லாம்.

(ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
                                             --- திருமந்திரம்

இதன் பொருள் ---
உண்ணப் புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத்தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.


ஆரம் என்பு புனைந்த ஐயர்தம்
         அன்பர் என்பது ஓர் தன்மையால்
நேர வந்தவர் யாவராயினும்
         நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர்கொண்டு, கைகள்
         குவித்து நின்று, செவிப்புலத்து
ஈரம் மென் மதுரப்பதம் பரிவு
         எய்த முன்உரை செய்தபின்.   
                                   --- பெரியபுராணம்.

இதன் பொருள் ---
எலும்பினை மாலையாக அணிந்த சிவபெருமானுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப் பொருந்த வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மையான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லிய பின்பு.

அடியவரை வரவேற்கும் சொற்கள் மூவகைப் பண்பினவாய் அமைய வேண்டும். முதலாவதாகக் குளிர்ந்த மொழிகளாக இருத்தல் வேண்டும். ஈண்டுக் குளிர்ச்சி அன்பின் மேலதாம். `ஈரம் அளைஇ` (குறள், 91) என வருவதும் காண்க. இரண்டாவது மென்மையாக இருத்தல் வேண்டும். மூன்றாவது இனிமையை யுடையவாக இருத்தல் வேண்டும். இதுவே ``ஈரமென் மதுரப்பதம்`` எனப்படும்.

Thirukkural - Management - Communication - Pleasant speech
Words spoken by a person of character, discipline, humility, and concern are always pleasant to listen to as those words do not come just from the mouth of that person but they come from the heart of that person, according to Kural 91.

Those are sweet words which men of virtue speak
Mingling t\love with sincerity.

Whatever comes from a person's heart goes to another person's heart. Words that come from the heart not only please the ears of the listeners but also create love and positive feelings in the hearts of the listeners. An emotionally matured person never uses words that are cunning and harmful. So, a person is known not only for what he speaks but also for how he speaks.

English Meaning - As I taught a kid - Rajesh
The words uttered by enlightened scholars will only be kind words that , carry(and display) love in its soul and are honest devoid of any malice /self-interest etc.

Kind words should really have love and compassion displayed because our words should not hurt anyone even for their mistakes. That's why Thiruvalluvar uses 'ஈரம் அளை'  i.e. mixed with love. Even kind words must be honest. It cannot be false words to butter someone. Kind words should not be used to sugar coat self-interests, malicious, cunning thoughts. That's why Thiruvalluvar uses 'இப்படிறு இலவாம்"

Questions that I ask to the kid
How would the words uttered by enlightened scholars be?